நகைச்சுவை- கண்ணீர்கண்ணீர் சோமு-ராமு உரையாடல்சிரிக்க, சிந்திக்க

சோமு : ஐயா , ராமு ஐயா இது என்னையா அநியாயம்
ஊர் மக்களே ஓத்துமட்டமா வந்து விக்கி விக்கி
அலுவரங்க, கண்ணீர்விடறாங்க நம்ம தலைவர்
இறப்பை எண்ணி அவர் உடலைப் பார்த்து ஆனா
தலைவர் பய்யன் ரவி மட்டும் அலுவமில்லை,
கண்ணீரும் ஒரு சொட்டும் விடலை என்னங்கய்யா இது ?


ராமு : டேய் சோமு நீயும் மத்தவங்க போல தப்பு கணக்கு
போட்டுட்டா தம்பி ரவியைப் பத்தி ; அது தங்கமான பய்யன்
அவனுக்கு கண்ணில் நீர் சுரக்காது அது ஒரு சுரப்பியின் குறை
ஆனால் அவன் எப்படி அழுவான் ...............கண்ணீர் இல்லாம
அழுதா ..........இவன் செயற்கையாய் அழுகிறான் , அப்பன்
பாசம் இல்லைனு வாங்க.........பாவம் ரவி தம்பி ...............
நெஞ்சில் உதிரம் சொட்டும் அளவுக்கு அவன் அப்பன் மேல்
பாசம் எனக்கு நன்றாகவே தெரியும் .................

சிலர் கண்ணீர் விடுவார் .............பாசாங்கு கண்ணீர்
மமுதலைக் கண்ணீர் ....................சிலருக்கு பாவம்
கண்ணீர் வத்தி வருவதில்லை......இவர்கள் இதயம்
கண்ணீர் விடும் ..................ஆனால் வெளியில் தெரியாது
உண்மை சோகம் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-May-17, 2:08 pm)
பார்வை : 542

மேலே