நட்பும் காதலும் வேறு

நட்பும் காதலும் வேறு
பாலும் நீரும் கலந்து இருப்பது போல்
இவை இரண்டும் கலந்து இருக்கும்
நாம் தான் அன்னப்பறவைப் போல்
பிரித்து அறிய வேண்டும்.
கரங்களை பற்றி விழிகளால் பேசி
மனதினுள் நுழைவது காதல்
கரங்களை பற்றி வார்த்தையால்
மனத்திற்கு ஆறுதல் கூறுவது நட்பு
காதல் பாதையில் நட்பு வருவதில்லை
கலங்கமில்லாத நட்பு கலங்கரை விளக்கம்
என்றும் ஒளிவீசிக் கொண்டிருக்கும்.
பகை இல்லாத நட்பும்,காதல் இல்லாத நட்பும்
எப்போதும் பசுமையான நினைவுகளை
-வருடிக் கொண்டிருக்கும்…
காதல் என்பது நிலவினை போல்
அவ்வப்போது மறையவும் செய்யும்.
நட்பு என்பது அந்த நிலவைத் தாங்கும்
வானம் போல் என்றும் மறைவதும் இல்லை!அழிவதும் இல்லை!

எழுதியவர் : ர.ரம்யா (25-May-17, 2:17 pm)
பார்வை : 343

மேலே