யானைகள் பலவிதம்
பாவம் வாயில்லாப் பிராணிகள். அதற்கு சைவயானை என்றும், வைணவ யானை என்றும், முஸ்லிம் யானை என்றும் மதச் சாயம் பூசி விடுகிறான் மனிதன். யானைக்கு ‘மதம்’ பிடிப்பது இதனால்தானோ? கவிஞர் வைரமுத்துவின் கவிதை நினைவில் வந்தது. இதோ அந்தக் கவிதை :
விலங்குகள் நம்மிலும்
மானமுள்ளவை
யானையின் காலில்
யானை விழுந்ததாய்த்
தகவல்கள் இல்லை
காட்டுக்குள்
மூட நம்பிக்கை இல்லை
அங்கே
நெருப்புக்கோழி கூடத்
தீ மிதிப்பதில்லை
மதம் பிடித்தலையும்
மனிதா
யானை தவிர
மற்ற விலங்கெதற்கும்
மதம் பிடித்ததுண்டா?
ஒரு
கிறிஸ்தவக்கிளி – இந்துப்புலி
சமணக்கொக்கு – பெளத்தப்பசு
சீக்கியச்சிங்கம் – மகமதியமான்
காட்டுக்குள் அடையாளம்
காட்ட முடியுமா?
– கவிப்பேரரசு வைரமுத்து