மறைநத்துவைக்கப்பட்ட என் டயரி

மீண்டும் ஒரு முறை தவழவிட முடியா வரிகளை
எழுதிவைக்கப்பட்ட நம் காதல் டயரி அது!,
காலங்கள் சென்றினும் சிதைந்துவிடா!
நம் வாழ்க்கை அது!,
பிறவிகளுக்கெல்லாம் பிறவியெடுத்து!
காத்திருந்த காலங்களில் சிதரப்பட்ட முத்தெழுத்தது
யாரென்றே தெரியாமல் வடித்து விட்ட வர்ணணைகளை
உன் முகம் கண்ட பின் எடுத்துரைக்க காத்திருக்கிறேன்.
காலத்தின் மீது பாரத்தையிட்டு,
வந்திட மறவாதே என் டயரிக்கு உயிர்க்கொடுக்க;
காத்திருக்கிறேன் மீண்டும் மீண்டும்,
என் டயரிக்கு உயிர் தந்திட வர மறந்திடாதே செல்லமே!.

எழுதியவர் : நுஸ்ரா ஷா (14-Jun-17, 8:47 pm)
சேர்த்தது : Nusukutty
பார்வை : 87

மேலே