இடைத்தேர்தலில் யாருக்கு ஒட்டு போடுவா முத்து-சந்துரு உரையாடல்
முத்து : டேய் சந்துரு, இப்போ வர இடை தேர்தல் ல
நீ யாருக்கு எந்த கட்சிக்கு ஒட்டு போடப்போற
கொஞ்சம் சொல்லேன் .................
சந்துரு : போன தேர்தல் வரை எந்த நபர்
எந்த கட்சி மக்களுக்கு உழைக்கும் கட்சி
என்று நானே யோசித்து ஒட்டு போட்டேன்
ப்ரயோஜம் இல்லை; அப்படிப்பட்ட கட்சியையும்
நபரையும் பெருபான்மையோர் விரும்புவது
இல்லை போலும்; .....................
இப்போது நிச்சயித்து விட்டேன் யார் வீடு தேடி
வந்து அதிக பணம் தரங்களோ அவங்களுக்கு
ஒட்டு போடுவதற்கு எண்ணம் ..................
முத்து : டேய் உனக்கு தெரியுமா நீ சொல்வது சட்டப்படி
குற்றம் ...................பிடிபட்டால் , கொடுத்தவர்க்கும்
வாங்கியவர்க்கும் தண்டனை ................?????
சந்துரு : அப்போ இதுக்கு யார் பதில் தருவாங்க .............
நாம தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏக்கள் , எம்.பீ களும்
கட்சி பலப் பரிட்சைபோது , பணம் வாங்கி
கட்சி மாறுறாங்களே...........இது அம்பலமாயும்
இதை நிறுத்த முடியவில்லை போலும் .............
அப்படி இந்த நாட்டுக்கு தொண்டு செய்ய வந்த
இவர்களே பணத்துக்கே வாழ்பவர்களை இருந்தால்
அன்றாட வாழ்க்கைக்கே பணம் இல்லாமல் வாழும்
நாம் யாரைப் பார்த்து வாழ்க்கை நடத்துவது
....................சொல்லு பார்ப்போம்..........இப்போதெல்லாம்
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்று வாழ்வு
அமைந்து விட்டது .................???????????????
நான் என்ன செய்ய சொல்லு பார்ப்போம்
முத்து : அப்பப்ப ........உன் பேச்சில் தவறில்லை.......ஆனால்
இப்படியே ஒவ்வொருவரும் நினைத்தால் நீதி-நேர்மை
.................என்ற பேச்சுக்கு இடமிருக்காது .............
வல்லவன் ராஜ்யம் நீடிக்கும்.............அந்த கால
கொடுங்கோல் ஆட்சி வந்திடலாம்..........
டேய் சந்துரு, நம் போன்ற இளைஞர்கள் மக்களுக்கு
விழிப்புணர்ச்சி ஏற்பட வீடாக சென்று நல்ல
அரசியலை பற்றி போதிக்கணும்.........நல்ல அரசு
வந்திட வழி வகுக்கணும் ...........
சந்துரு : போக போக தெரியும் இந்த அரசியல்
போக்கு புரியும் , புரியும் ..............