கவிதையே உன்னை பார்த்து

சிலைவடிவாய் நீ இருக்க
சின்னஞ்சிறு குழந்தைகளின்
சிரிப்பை போல் நீ உதிர்க்க
சில்லு சில்லுகளாய் சிதறித்தான் போகிறேன்
சித்திரமே உன்னை பார்த்து !

கலப்பு இல்லா தங்கமாய் நீ ஜொலிக்க -உன்
காந்த விழி பார்வையால் நீ பார்க்கும்போதெல்லாம்
கவிதை ஏதும் எழுதாமல் இருக்க முடிவதில்லை
கவிதையே உன்னை பார்த்து !

எழுதியவர் : முபா (30-Jun-17, 12:07 pm)
பார்வை : 303

மேலே