எதுக்கு பழகனும்

எதுக்கு பழகனும்..?
************************

கல்யாணம் முடிச்ச கைய்யோட
ஒரு புதுமணத்தம்பதி
குளிர்ச்சியான மழைப்பகுதிக்கு
ஹனிமூன் போறாங்க....

அந்த பொண்ணு அதிகம் படிச்சதும் இல்ல..
கட்டிக்கொடுக்குற வரைக்கும் இவ்வளவு தூரம்
வெளியூர் பயணம் போனதும் இல்ல..
கிராமத்துலேயே வளர்ந்தது

பையன் கொஞ்சம் படிச்சிருக்கான்...
அந்த பொண்ண...
வீட்டுல சொன்ன ஒரே காரணத்துக்காக
வேண்டா விருப்பாக கல்யாணம் பண்ணிக்கிட்டான்...

முதல்நாள் ரெண்டுபேரும் சுத்திப்பார்க்க போறாங்க...

அந்த பொண்ணு சொல்லுது...
மாமா இந்த இடம் எவ்வளவு அழகா இருக்குல...

என்றதும்
முதல்ல என்ன மாமான்னு கூப்புடாத..!.
ஏதோ... வயசான மாதிரி...!!
இரிட்டேட்டிங்கா இருக்கு...!!!

ம்ம்ம் இனிமே கூப்பட மாட்டேங்க...
என்று
அந்த பொண்ணு கொஞ்ச நேரம் அமைதியா இருக்க

இப்ப எதுக்கு உம்முன்னு இருக்க...
ஏதாவது சாப்புடுரியா...?
என்று கேட்க...

காபி...

இங்க டீ தான் ஃபேமஸ்
என்றவரே அண்ணே ரெண்டு டீ
என்று கடைக்காரனிடம் சொல்ல...

எனக்கு டீ பிடிக்காது...!

எனக்கு உன்னையும் தான் பிடிக்காது...
நா கட்டிக்கலா...
என்று முனங்கியவாறு...

குடி நல்லா இருக்கும்...
என்று டீயை குடித்தபடி
ஆமா...எதோ சொல்ல வந்தியே என்னது...?
என்றதும்...

இல்ல... இந்த இடம் இவ்வளவு அழகா இருக்கே...
இங்கையே கொஞ்ச இடம் வாங்கி...
சின்னதா ஒரு தோட்டம் போட்டு...
நீங்க... நான்னு... அப்புறம் நம்ம குழந்தைன்னு
மூணு பேரு மட்டும் இருந்தா எப்படி இருக்கும்...
என்று சொல்ல

ம்ம்ம்... கேவலமா இருக்கும்...
என்ன என்ன நினைப்பாங்க...
இதுக்காடி எங்கப்பா என்ன படிக்க வச்சாரு..
இங்க ஒரு வீடு, ஆடு, மாடு தோட்டமா...
சரியானா நாட்டுப்புறத்தான இருக்கியே...!

என்று அவன் சொல்ல...
அவளால் பதிலுக்கு வாய் திறந்து
சொல்ல முடியல.. ஆனா அவ மனசு சொல்லும்...

இந்த பேச்சல்லாம் கேட்கவாடா
எங்க அப்பா
வீடு, ஆடு, மாடு, தோட்டம் எல்லாத்தையும்
வித்து உனக்கு என்ன கட்டி வச்சாரு...

எனக்காக எங்கப்பா வித்தத
நமக்காக உன்னால வாங்க துப்பில்லைன்னு சொல்லுடான்னு...!!

டீ எப்படி இருக்கு...?

ம்ம்.. நல்லா இருக்குங்க...!!

இனிமே குடிச்சி பழகு...!!!

 
இவண்
✒க.முரளி (spark MRL K)

எழுதியவர் : க.முரளி (1-Jul-17, 7:03 pm)
சேர்த்தது : க முரளி
பார்வை : 98

மேலே