காதலிக்க யாருமில்லை,
என்
தனிமைகள்
காற்றில்
விரவி
பசுமை இழந்த
கிளைகளில்
யாருமில்லை
காதலிக்க..........,
கசியும்
கண்ணீர் துளிகளின்
ஈரத்தின் எச்சங்களில்
உயிர்ப்பின்
ரேகைகள்
நனைய
உயிர் நகரும்
நாட்களில்
யாருமில்லை
காதலிக்க............,
காற்றின்
உறவில்
கலையப்படாத
கவலைகளின்
நீட்சிகளாய்
சருகுகள்
உதிர
யாருமில்லை
காதலிக்க.....,
வாசனை
பூக்கள்
உதிர்ந்திருந்தும்
நுகர்ச்சிகள்
உணர இயலாமல்
உணர்வுகள்
இழந்த
ஒரு
எச்சமாய்
நான்.....,
காதலிக்க
யாருமின்றி ..........,
நான்
கடந்து கொண்டிருந்த
காட்டில்
இறந்து போயிருந்த
ஒரு
மரத்தின்
இறுதியான
வார்த்தைகள் இவை ..............,