என் வானின் சந்திரனே

காலையில் பிரிகிறாய் - களைத்து
மாலையில் வருகிறாய்

வளர்ந்தாய் வளர்பிறையாய் - உழைத்து
தேய்கிறாய் தேய்பிறையாய்

அம்மாவாசை நிலவாய் - உன்சிறப்பு
இருந்தும் தெரிவதில்லை

பௌர்ணமி நிலவாய் - உன்சிரிப்பு
சற்றும் குறைவதில்லை

மூன்றாம் பிறையாய் - உன்கோபம்
என்றும் நிலைப்பதில்லை

மன்மத சுந்தரனே
நீ என் வானின் சந்திரனே

அன்புடன்

உன் சகி

எழுதியவர் : ஜெகன் ரா தி (5-Jul-17, 9:15 am)
பார்வை : 137

மேலே