என் வானின் சந்திரனே
காலையில் பிரிகிறாய் - களைத்து
மாலையில் வருகிறாய்
வளர்ந்தாய் வளர்பிறையாய் - உழைத்து
தேய்கிறாய் தேய்பிறையாய்
அம்மாவாசை நிலவாய் - உன்சிறப்பு
இருந்தும் தெரிவதில்லை
பௌர்ணமி நிலவாய் - உன்சிரிப்பு
சற்றும் குறைவதில்லை
மூன்றாம் பிறையாய் - உன்கோபம்
என்றும் நிலைப்பதில்லை
மன்மத சுந்தரனே
நீ என் வானின் சந்திரனே
அன்புடன்
உன் சகி