பொய் அன்று மெய் எனவே

உன் அழகின் அதிசயம் பற்றி
எத்தனை கவிதைகள் புதிது புதிதாய் ,
பொய்களை
புனைந்து புனைந்து
எழுதிக்கொண்டே இருந்தாலும் !

ஒருமுறை அருகே உன் முகம்
தரிசித்து விட்டால் !

பொய் அன்று மெய் எனவே
உறுதியாய் மெய் எனவே
என்றுதான் அடம்பிடிக்கிறது
என் மனம் !

எழுதியவர் : முபா (15-Jul-17, 8:08 pm)
Tanglish : poy andru mei enave
பார்வை : 347

மேலே