en anbu காதலை

பருவத்தில் ஒரு முறை பூத்தேன்
உந்தன் நெருக்கத்தில் பூக்கிறேன் ஒவ்வொரு முறையும்....
கனவுகளோடு வாழ்ந்த நான்
கண்ணாலன் கைகோர்த்து
செல்கிறேன் இனி வாழும்
ஒவ்வொரு நொடியும்...
மஞ்சளினால் குளிர்ந்த என்
முகம் மணவாளன் முத்தத்தாலே
குளிர்கின்றது முப்பொழுதும்...
மருதாணி வைத்து சிவந்த
எந்தன் உள்ளங்கை தலைவனின் குழல் வருடியே
சிவந்து போகிறது...
சத்தமின்றி வரம் கேட்கிறேன்
நித்தமும் உன் மடி சேர...

எழுதியவர் : Anusha devi (24-Jul-17, 11:17 am)
பார்வை : 170

மேலே