ஒரு தலை காதல்
காதலியே உன் விழியின் ஓரம் பார்த்தாயோ......
உன் இதய துடிப்பும் என் இதயம் கேட்க வைத்தாயோ ......
உயிர் போகும் போது உடல் மட்டுமே அழிந்து போகும் .........
உள்ளம் உன்னை உடன் அழைத்து போகும் .....
உன்னை நெருங்கியதும் இல்லை .......
உடல் உரசியதும் இல்லை .........
எனினும் உன்னுடன் வாழ்கிறேனே........
என் அழகான புன்னகையும் நீ தானடி .........
நிற்காது வழிந்ததோடும் கண்ணீரும் நீ தானடி ........
என்னை காக்க வைப்பதற்கான காரணம் தெரிய வில்லை ......
எனினும் நான் உன் மீது வைத்திருக்கும் காதலும் குறைய வில்லை .......
உன் சுவாச காற்றும் என் மீது தென்றலாய் வீசுதடி .......
உன் மௌனத்திற்கு காரணம் தெரியாது ......
என் இதயம் கண்ணீரில் மிதக்குதடி ........
காலம் போகட்டும் எனக்கு பொறுமை உள்ளதடி .......
உன்னுடன் வாழும் நாட்கள் குறையுமே .........
அதனால் கொஞ்சம் வருத்தமும் உள்ளதடி .........
உன்னோடு நான் வாழும் அந்த நாட்கள் ........
என் வாழ்வின் பொற்காலம் ஆகுமடி .........
மாறாக உன்னோடு வாழ முடியாமல் போனால் .......
அந்த மரணத்தையும் வென்று உனக்கு மகனாக பிறப்பேனடி ........
என் ஒரு தலை ராகம் என்றாவது ஒரு நாள் உன் செவியோரம் கேட்கும்..........
அன்று நான் இல்லா விட்டாலும் ..........
என் கல்லறையில் உனக்காக என் இதயம் துடித்து கொண்டு தான் இருக்கும்........
அன்று எனக்காக நீ கதறி அழுகும் ஓசையானது ..........
கல்லறையில் துடித்து கொண்டிருக்கும் என் இதயம்..........
துடிப்பை நிறுத்தி தூங்கு வதற்காக நீ பாடிய தாலாட்டு ஆகுமடி........