அம்மா

கருவுல நான் இருக்க கவல இல்ல என் தாய்க்கு...............
ஒரு வேல சோறு தின்னு என் உசுர காத்து வந்தா............
நான் பொறந்த வேலயில-ஓரு வேல சோத்துக்கே வழி இல்ல...........
பாலூர வேணுமுனு பழய கஞ்சி குடிச்சி புட்டு-என்ன பசியாத்தி தூங்க வைப்பா..........
எட்டு மணி வேலைக்கு அவ விடியுமுன்னே நடக்க வேணும்.......
போர வழி தூரமுன்னு சேலயில தூலி கட்டி-என்ன வயித்தோட அனச்சி போவா.........
அவ கலயெடுக்கும் நேரம் வர நான் பசி மறந்து தூங்கனும்னு-மரத்தடியில் தொட்டில் கட்டி என்ன அவ தூங்க வைப்பா..........
ரேசன் அரிசி வாங்க கூட வழியில்லா காலமிருக்கு-அப்ப கூட என் பசிய போக்கிருவா எனக்கு நல்லா நினைவிருக்கு................
திங்க கூட வழி இல்ல தீபாவளி வந்துச்சி-புது சட்ட வேனும்னு புடிவாதம் நான் புடிச்சேன்..............
கடன் வாங்கி எடுத்து தரேன் கலங்காதேனு சொல்லி போனா.............
ரொம்ப நேரம் ஆயிருச்சி-கடன் வாங்க போனவல காணுமுனு நான் போனன்........
அங்க கடன் கொடுக்க மறுத்த அவன் என் தாய காலால எட்டி விட்டான்.........
அத எட்ட நின்னு பாத்துபுட்டு-நான் கண் கலங்கி வீடு போனன்.........
மொத்த வலிய மறச்சி கிட்டு-ஒத்த சட்ட சிரிப்போட எனக்காக எடுத்து வந்தா.............
என்ன பெத்த தெய்வம் அவ-என்ன கொல்லாம கொன்னு வச்சா............
வருசம் பத்து ஆயிருச்சி இன்னும் அவ மனசு நோக நான் வச்சதில்ல...........
அனைவருக்கும் என் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்...............
பிறக்கும் வரை நம்மை வயிற்றில் சுமந்த அவளை.......
இறக்கும் வரை நம் மனதில் சுமக்க வேண்டும்..............விஜய்

எழுதியவர் : (25-Jul-17, 3:09 pm)
Tanglish : amma
பார்வை : 93

மேலே