கும்பகோணத்தின் அக்னிக்குஞ்சுகள்

குடந்தை நகரில்,
நீரூற்றவேண்டிய
குழந்தை மலர்களுக்கு - யாரோ
நெருப்பை ஊற்றிவிட்டார்கள்

மகாமகத்தில் வேள்விகள் நடத்துவதற்கு
மரவிறகுகளை விட்டுவிட்டு
மயிலிறகுகளை கொழுத்திவிட்டார்கள்
கும்பிடும் தெய்வத்திற்கு யாகம் செய்ய
குழந்தைகளின் உயிர்கள்தான் தியாகமா?

பள்ளிகள் பிள்ளைகளை
உயரமான இடத்திற்குக் கொண்டுசெல்லும்
என்பார்கள் - ஆனால்
இந்தப்பள்ளிகள் அவர்களை
வானுலகத்திருக்கா கொண்டு செல்லும்?

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (25-Jul-17, 2:55 pm)
பார்வை : 306

மேலே