ஆழி காதல் இயற்கையும் கலவியுறும்

ஆழி காதல் (இயற்கையும் கலவியுரும்)

ஞாயிறு ஈர்க்க திங்களும் ஈர்க்க
ஓதங்களாய் ஒதுங்கி
முகிலுடன் காதல் கொள்கிறாள்! ஆழி!!

முகிலோ!!
இவள்பால் ஈர்ப்புண்டு இவள்மேல்
புயலென மையம் கொண்டு
கலவியுற எண்ணி நகர்கிறான்

ஓதங்களின் ஓசையினுடே
தன் விருப்பம் மொழிகிறாள்! ஆழி!!

இட்சைக்கிணங்கியவளோடு இணைந்து
உச்சம் பெற்று
உயிர் அணுக்களாய்
உதிர்ந்து (இவளினுள்) கரைகிறான்!!


ஆம்!!! இயற்கையும் (காமமற்ற) கலவியுரும்!!!

எழுதியவர் : கௌதமன் பாலு (13-Aug-17, 6:40 am)
பார்வை : 234

மேலே