சுதந்திரம்
பெற்றுக் கொடுத்த சுதந்திரம்
பாசம்மிகு பண்புமிக்க
பரம்பரையாய் வாழத்தான்,
பாரத தேசம் என்றாக
பறைசாற்றி வாழ்ந்திடத்தான்
சுதந்திரமே ,
வழி தெரியாப் பாலகன் போல்
திகைக்கின்றோம்
என்ன வழி / ஏது பிழை
கண்டுணர்ந்து வாழ்ந்திடுவோம்
பதட்டத்துடன் பரபரப்பில் மக்கள்
எங்கும், என்னமோ, ஏதோ
போராட்டம் என்றென்றும்
தொடர்கதைதான்,
சலசலப்பில் கலகலப்பில்
அலைமோதும் மக்கள் ,
இது வேண்டாம் இனியும்
இணைந்து நாம் இன்பமாய்
வாழ்ந்திட இத்தினமே
சூளுரைப்போம்