ஓர் கைப்பேசியின் அழைப்பு மணி

ஓர் கைப்பேசியின் அழைப்புமணி
உன் அன்னை போல் என்னை நீ அன்பு செய்து காத்தாய்
உன் தாரமாய் என்னை நீ இறுகபற்றி அணைத்தாய்
உன் செல்லமான பிள்ளைபோல முத்தமிட்டும் மகிழ்ந்தாய்
இணை பிரியாத் தோழனாக உடனழைத்தும் சென்றாய்...
பேசத்தான் நான் பிறந்தேன் நீ மோசம் போக இல்லையடா
உன் உற்றாறும் பெற்றோரும் உனக்காக அங்கிருக்க
நீ உன் கைப்பேசியில் காதோடு கதை பேசி
வண்டியில் நீ செல்லும் பயணம் நிச்சயம் வீட்டிற்கு அல்ல...
விழித்திரு பிழைத்திரு.....

எழுதியவர் : கவிராஜப்பா (15-Aug-17, 4:02 pm)
சேர்த்தது : கவிராஜப்பா
பார்வை : 88

மேலே