ஏக்கத்தின் இரவுகள்

பள்ளி பருவத்தில்
பருவத்தில் கோட்டை கட்டி
விளையாடிய நினைவுகள்
பாவாடை தாவணியில்
நீ உலவந்த போது
என் நெஞ்சம் துடித்த நினைவுகள்
பள்ளிகாலம் முடிந்த பின்னும்
பருவகாலம் முடிந்துவிட்டதோ
பருவத்தில் பூத்த காதல்
கற்பனை கோட்டை போலும் ஒருதலை
காதலெனும் கற்பனை
கோட்டையில் உன்னை தேடி தேடி
கழிந்துவிடுகிறதடி
ஏக்கத்தில் கழிந்துவிடும்
இரவுகள்

எழுதியவர் : சௌம்யா செல்வம் (19-Aug-17, 7:16 pm)
பார்வை : 519

மேலே