வேலையும் வெளியூர் பயணமும்

மறுமுறை வருவேனா வந்து
உன்னை பார்ப்பேனா
எனச்சொல்லி கூவுகிறேன் கோழி போல

வீடு திரும்பியதும் உனையே தேடும்
கண்களின் காதலை அறிவாயோ
எனச்சொல்லி பாடுகிறேன் குயில் போல

ஊற விட்டு போக மனசே இல்ல
ஊருக்குள்ள எப்போதுமே வேலையும் இல்ல
உன்னையும் என்னையும் வெறுக்குது
ஊறவிட்டு போன இழுக்குது காதல்.

கடல் தாண்டி போய்விடுவேன் என்று
காதலை கண்களால் சொன்னால்
கரையில் தான் நிற்கிறேன் இன்னும்
கப்பல் ஏறவில்லை

பயணம் என சொல்லி கல்யாணம் செய்ய
பணம் என சொல்லி பயணம் செல்ல
பயம் கொண்டு உன்னை விட்ட
பயணம் மறக்கவில்லை

கண்களை மூடி திறந்தேன் என்
கண்கள் அழுதன உன்னை எண்ணி.

எழுதியவர் : நா விஜய் பாரதி (21-Aug-17, 2:44 pm)
Tanglish : velai illa
பார்வை : 169

மேலே