நா சாகப்போறேன்

நா சாகப்போறேன்
**********************

ஒருத்தனுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போய்
சோகமா இருக்கான்...!
சொல்லப்போனா அவனுக்கு வாழ்வே பிடிக்கல...!!

எப்பப்பார்த்தாலும்
அவனோட உள்மனசு
அவன்கிட்ட சொல்லிக்கிட்டே இருக்கும்

“பேசாம செத்துட்டா... நமக்கு
எந்த பிரச்சினையும் இருக்காதுலேன்னு...!”

இப்படித்தான் ஒருநாள்
அவனோட உள்மனசு சொல்லுச்சின்னு
தற்கொலை பண்ணிக்க கிளம்பிட்டான்...!!

உச்சு மலை...!
அங்க இருந்து கீழ விழுந்தா,
ஒரு எலும்பும் மிஞ்சாது..!!

இப்ப அந்த இடத்துல நின்னு
குதிக்கிறதுக்காக நிக்கிறான்..!!

அப்ப...
அந்த வழியா வந்த ஒரு பெரியவர்
அவன்கிட்ட கேட்கார்...

இங்க என்னப்பா பண்ணிக்கிட்டு இருக்க..?

ம்ம்ம்... சாகப்போறேன்...!!

எதுக்கு..?

வாழப்பிடிக்கால..!!

ஏன்..?

என்னைய யாருக்குமே பிடிக்கல...!!
என்றதும்

ஓ... இதுதான் உன் பிரச்சசினையா...?

ஆமா...!!

அப்ப தாராளமா குதிச்சி செத்துடு..!
என்று அவர் சொல்ல

இவனுக்கு ஒன்னும் புரியல..!
அப்படியே ஒரு நிமிஷம்
அந்த பெரியவர பார்த்தபடி இருக்கான்...!!

சரி... உனக்கு யாரெல்லாம் பிடிக்கும்..?
என்று கேட்க
அவன் வாயில் இருந்து பதில் வரல...

சரி.. உனக்கு என்னலாம் பிடிக்கும்..?
அதுக்கும் பதில் வரல...
யோசிக்கிறான்..!!

பிடிக்காத விசயத்த
டக்கு... டக்கு... சொல்லிட்டு
பிடிச்ச விஷயத்தை கேட்டா இப்படி யோசிக்கிற...!!
இது தான் உன் பிரச்சினையே...

முதல்ல இத போய் சரிபண்ணிட்டு..
அப்புறமா வந்து சாகு...!!!

என்று சொல்லிட்டு மெல்ல நடந்து போக ஆரம்பிச்சிட்டார்...
அந்த பெரியவர்...!!

இவண்
✒க.முரளி (spark MRL K)

எழுதியவர் : க.முரளி (29-Aug-17, 1:42 am)
பார்வை : 374

மேலே