அழகியல் கவிதை-1

“பிசிறு தட்டி, மறைந்து கொண்டே போகிறதே? ”

பேரன் கேட்டான்.. !

தறியிலிருந்த தாத்தா சொன்னார்..

“நெடுக்காக விழுந்தால் போதுமா?
நிலைத்திருக்க
குறுக்கிலும் கோடிட வேண்டும்...! ”

அது சரி..!

யார் குறுக்கில் நெய்வது, வானவில்லுக்கு?

எழுதியவர் : அருணை ஜெயசீலி (30-Aug-17, 12:28 pm)
பார்வை : 238

மேலே