சுகமான நினைவுகள்
![](https://eluthu.com/images/loading.gif)
சுகமான நினைவுகள்
கவிதை by : கவிஞர் பூ.சுப்ரமணியன்
அப்பா
கோபத்தில்
அடித்தபோது
உடல் மட்டுமல்ல
உள்ளமும் வலித்தது
அப்போது....
அவன்
அம்மாவின்
அன்பான தடவல்
அண்ணன் அறிவுரை
அக்காவின் பாசம்
தம்பியின் கண்ணீர்
அப்பாவின் அடி
இப்போது அவனுக்கு
வலிக்கவில்லை.!
பூ.. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை சென்னை