காலம்

காலம்
கவிதை by : கவிஞர் பூ.சுப்ரமணியன்

காலம்
பொன் போன்றது
என்பர் அறியாதவர் !

பொன் போனால்
திரும்பி வரும்

உயிர் போனால்
திரும்ப வருமா ?

காலம்
பொன்போன்றது அல்ல
உயிர் போன்றது !

வாழ்வில்
கடந்த காலம்
மீண்டும் வராது

எதிர்காலம்
எதிர் நோக்குவது

நிகழ் காலமே
நிலையானது !



பூ.சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (9-Sep-17, 12:56 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : kaalam
பார்வை : 219

மேலே