மாலை சூட அ வா

மாலை சூட (அ ) வா !!!

மாலைதனைச் சூடிடவும் வாராயோ வெண்ணிலவே
பாலைதனில் காத்திருக்கும் பாவியுமே நானடியோ !
ஓலையுமே வனைந்திட்டேன் ஓரவிழிப் பார்ப்பாயோ !
ஆலைதனில் வெளியேறும் அசுத்தமல்ல தெளிவாயே !
காலையிலே கண்விழித்தால் கண்முன்னே நிற்கின்றாய்
மாலையிலும் மாதுயுன்னால் மயக்கங்கள் வந்திடுதே !
சோலையிலே மலர்களுமே சொக்கித்தான் போகுமடி !
வேலைபளு மிகுந்தாலும் வேட்கையினால் நாடிடுவேன் !

ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (15-Sep-17, 10:09 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 104

மேலே