நான் பேசும் வரை
என்னில் நான் இழந்ததை,
பெண்ணில் நான் தொலைந்ததை
அவள் பின் அழைந்ததை
அவளே,காதல் சொன்னதை,
கைபிடித்து நான் நடந்ததை,
முத்தத்தில் நான் கடித்ததை,
வலிக்குதென்று அவள் அடித்ததை,
மோதிரம் அவள் போட்டதை,
மற்றொரு காதலை மறைத்ததை,
மன்னிப்பு என்னிடம் கேட்டதை,
மன்னித்து அவளை அனைத்ததை,
என் கண்ணீர் அவள் துடைத்ததை,
மருபடியும் அவனுடன் பழகியதை,
அங்கேயே அவளை பிரிந்ததை,
பல இரவுகள் நான் அழுததை,
பாதி விஷம் குடித்ததை,
அம்மா கதறி அழுததை,
நண்பன் அங்கே துடித்ததை,
மீண்டும் நான் எழுந்ததை,
இன்றுவரை அவளை நினைப்பதை,
மண்ணில் யார் அறிவார்,
மனம் திறந்து நான் பேசும் வரை..!
்