என் உயிரினும் மேலான நெடுந்தொடர் - - - பாகம் 52

ஒன்றிரண்டு நாட்கள் ப்ரவீனால் விஜியிடம் சரியாக பேச முடியவில்லை.ஏதோ தவறு செய்கிறோமோ என்று உள்ளூர பயம், இன்னும் கொஞ்சம் அவகாசம் எடுத்துக்கொள்ளலாமா, நாம் எடுத்த முடிவு சரியா என இன்னொரு முறை யோசிப்பது தானே சரி?என்றது ஒருபக்க மனம்.முபாரக் நர்கீஸ் சொல்வது சரி தானோ? இருவருமே ஒருவரை ஒருவர் காதலிக்கிறோமோ?எனது நடவடிக்கைகளும் அவளது நடவடிக்கைகளும் ஒரே மாதிரியாக தானே இருக்கிறது, நான் அவளை காதலிக்கிறேன் என்றால் அப்போது அவளது நடவடிக்கைகளுக்கும் காதல் என்று தானே பொருள்.ஒருவேளை.....நான் செய்வதே காதல் இல்லாமல் ஏதோ வேறொரு உணர்வாக இருந்தால்???எல்லாவற்றுக்கும் மேலாக நான் அவளிடம் காதலை சொல்ல அவளோ....உன்னை நான் அந்த கோணத்தில் பார்க்கவில்லை என்று சொல்லி என்னுடன் பேசாமலேயே போய்விட்டால்.........அப்படி இல்லாமல் என்னிடம் என்ன தகுதி இருக்கிறது அவளை காதலிக்க என்று கேள்வி எழுந்தால்????எல்லாவற்றிற்கும் மேலாக விஜியின் தாய் தந்தைக்கு பிடிக்காமல் உன்மேல் நம்பிக்கை வைத்து தானே எங்கள் பெண்ணுடன் உனது பழக்கத்தை நாங்கள் சந்தேகப்படாமல் அனுமதித்தோம், இப்போது உன் சுயரூபத்தை காட்டிவிட்டாய் அல்லவா என்று கேட்டுவிட்டால்??? பிரவீனின் மனம் என்னவோ விஜியிடம் சகஜமாக பேச தயங்கியது.

அவசரப்பட்டு முபாரக் நர்கீஜிடம் வேறு சொல்லிவிட்டோம், அவர்கள் வேறு யாரிடமாவது சொல்லிவிட்டால்,ஏன் விஜியிடமே சொல்லிவிட்டால்......என்ன செய்வதென்று புரியாமல் தவித்தான்.

அங்கே விஜியோ......"பிரவீன் ஏன் என்னை அவாய்ட் பன்றான், நான் மெசேஜ் அனுப்பறேன் பட் அவன் ரிப்லை சரியாக தராமல் இருக்கிறான், கால் பண்ணினா எடுக்காமல் இருக்கிறான், ஒன்றிரண்டு மெசேஜ் தான் செய்யறான், என்ன ஆச்சு இவனுக்கு, உடம்பு ஏதும் சரி இல்லையா, இல்லை எதையோ மறைக்கிறானா, இல்லை நாம் அவனை காதலிப்பதாக உணர்கிறானா, என்ன என்று தெரியவில்லை, வேறு யாருக்காவது கால் செய்து பார்க்கலாம் என்றால் அவர்கள் பிரவீன் மேல் மட்டும் இவ்வளவு அக்கறையா என்று கேட்டுவிட்டால், என்னதான் உண்மையான அக்கறையாய் இருந்தாலும் அவனாக சொல்லும்வரை நாம் வெளிக்காட்டாமல் இருக்க வேண்டும், ஒருவேளை நான் அவனை காதலித்து அவன் என்னை அப்படி நினைக்கவில்லை என்றால் அந்த வலி என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது. பேசாமல் இந்த சனி ஞாயிறு கடலூருக்கு பாட்டி வீட்டிற்கு செல்வதை போல போய் நேரில் பார்ப்பது தான் சரி, அவனை நேரில் பார்க்க காரணம்....? ம்ம்ம், ரம்யாவை கூப்பிட வருகிறானா என்று கேட்க வந்ததாக சொல்லலாம்......." விஜியின் மனமும் பதைபதைத்தது.

நான் அவனை காதலிப்பதாக தெரிந்தால் அம்மா, அப்பா என்ன நினைப்பார்கள்......என் மேல அவங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கு, என் சந்தோஷத்துக்காக கண்டிப்பா என் காதலுக்கு ஓகே சொல்லுவாங்க, ரம்மி......அவ சின்ன பொண்ணு, அவளோட கருத்து நமக்கு வேண்டாம், காயத்ரி.....? அவளுக்கு பிரவீனை பத்தி நல்லா தெரியும், அவன் என்னை நல்லா பாத்துப்பான், அதனால அவ எந்த அப்ஜெக்ஷனும் சொல்ல மாட்டா, முபாரக், ரியாஸ், விஜய்....................அவங்க எல்லாருக்கும் பிரவீன் சந்தோஷமா ஒரு குடும்பமா இருக்கணும் னு தான ஆசை இருக்கும், ஆனா....இந்த பிரவீன்.....அவன் காதலிக்கிறானா இல்லையான்னு எனக்கு தெரியலையே, நானும் எப்படி எல்லாமோ சுத்தி வளைச்சு கேட்டு பாத்துட்டேன், ஆனா ஒன்னும் புரியாத மாதிரி பதில் சொல்றான், ஒருவேளை நான் ப்ரபோஸ் பண்ணி அவன் இல்லைன்னு சொன்னா...என்கூட பேசாம போயிட்டான்னா.....அது ஆறாத ரணம் ஆய்டும்.....இதுக்கு என்ன பண்ணலாம், கடலூர் போய் அவனை நேர்ல பாத்து என்ன விஷயம், ஏன் நம்மகிட்ட ரெண்டு நாளா பேசல, இந்த விபரம் தான் தெரியணும். அவனை மட்டும் பார்க்க போவது சரி இல்லை, அது சண்டே.....கண்டிப்பா கிரிக்கெட் ல எல்லார்கூடயும் இருப்பான். சோ அவங்க எல்லாரும் பாக்க போறமாதிரி போகணும்....தனியா போகக்கூடாது. நம்மகூட காயத்ரியும் சேத்து கூட்டிட்டு போகணும்....அப்போதான் அவளை முபாரக் ரியாஸ் கிட்ட பேசவிட்டுட்டு நாம பிரவீன் கூட தனியா பேசி என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சுக்க முடியும்.....விஜியின் மனம் இவ்வளவு ஆழமாக என்றுமே வேலை செய்ததில்லை.

அவள் யோசித்துக்கொண்டிருந்த நேரம் டேவிட் போன் செய்தான்.

"ஹலோ விஜி, எப்படி இருக்க" என்றான் டேவிட்.

"ம்ம்ம், ஓகே டேவிட் நீ எப்படி இருக்க" என்றாள் விஜி.

"ம்ம்ம் சூப்பர், நான் நெக்ஸ்ட் வீக் லாங் வெகேஷன்ல பண்ருட்டிக்கு வரேன், கடலூர் ல ஐ.ஓ.பி. டோர்னமெண்ட் நடக்குது. நாங்களும் வெளயாடுறோம். கடலூரும் விளையாடுது. எனக்கு விளையாட்டை விட உன்னை பாக்கப்போறோம்னு தான் சந்தோஷமா இருக்கு, நாம கண்டிப்பா மீட் பண்ணனும் விஜி, ப்ளீஸ், எனக்காக" என்றான் டேவிட்.

"ஐ ஆம் நாட் ஸ்யூர் டேவிட், பட் ஐ வில் ட்ரை" என்றாள் விஜி.

"நீ இதை சொன்னதுக்கே எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு, அது சரி, மேட்ச் பாக்க கடலூர் வருவ இல்ல விஜி?" என்றான் டேவிட்.

பேச மனமின்றி, "டேவிட் கொஞ்சம் பிசியா இருக்கேன், நான் அப்புறம் பேசறேன்" என்றாள் விஜி.

"ஹே விஜி, என்ன டி, ரெண்டு நாளா டிம் ஆன ஜீரோ வாட்ஸ் பல்ப் மாதிரி இருக்க, என்ன விஷயம், உடம்பு சரி இல்லையா" என்றாள் காயத்ரி.

"ம்ம்ம், என்ன சொன்ன டி?" என்றாள் விஜி.

"என்ன டி, இவ்ளோ சத்தமா பேசறேன், திருப்பி என்ன சொன்ன னு கேக்கற?" என்றாள் காயத்ரி.

"இல்ல டி மனசு வேற எதையோ திங்க் பண்ணிட்டு இருந்த்துச்சு" என்றாள் விஜி.

"விஜி, நீ எதையோ மனசுல போட்டு நல்லா கொழப்பிட்டு இருக்க, என்னன்னு சொல்லு, அதுக்கு என்ன சல்யூஷன் னு பேசி முடிவு பண்ணலாம்" என்றாள் காயத்ரி.

"இல்ல டி, பிரவீன் ரெண்டு நாளா சரியா பேசல, மெசேஜ் எல்லாம் ரிப்லை அனுப்ப மாட்டேன்றான், என்ன ஆச்சோ னு பயமா இருக்கு டி" என்றாள் விஜி.

"என்ன உளறிட்டு இருக்க, இப்போ தான் என்கிட்டே பேசினார், நார்மலா தான பேசினார், ஆன ஏதோ உடம்பு சரி இல்ல போல, குரல் மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்துது" என்றாள் காயத்ரி.

"ஏய் வீகென்ட் கடலூர் போய் அவனை....அவன் மட்டும் இல்ல, எல்லாரையும் பாத்துட்டு வரலாமா?" என்றாள் விஜி.

"ஓ, போலாமே" என்றாள் காயத்ரி.

"அது சரி, ரம்யா எப்போ ரிட்டர்ன்?" என்றாள் காயத்ரி.

"மண்டே நைட், நீயும் வர இல்ல அவளை கூட்டிட்டு வர?" என்றாள் விஜி.

"ட்ரை பண்றேன், பட் நாட் கன்பார்ம், இது என்னோட பெஸ்ட் பிரென்ட் இந்த அழகு குட்டி விஜி சொல்ற டயலாக், அப்டின்னா வரேன் னு அர்த்தம்...." என்று சொல்லி விஜியின் கன்னத்தை கிள்ளிவிட்டு தனது இருக்கைக்கு சென்றாள் காயத்ரி.

அன்று மாலை பிரவீன் விஜிக்கு போன் செய்தான்.

அவ்வளவுதான், விஜிக்கு ஆனந்தத்தில் கண்ணீரே வந்துவிட்டது.

போனை அட்டென்ட் செய்த வேகத்தில், "டேய், லூசு, போன் பண்ணினா எடுக்கல, மெசேஜ் பண்ணினா ரிப்லை இல்ல, காயத்ரிகிட மட்டும் நார்மலா பேசி இருக்க, என்னடா பிரச்சனை உனக்கு, என்னை ஏன் அவாய்ட் பண்ற, ரெண்டு நாளா என்னை லூசு மாதிரி தனியா பெனாத்த விட்டுட்டியே, பைத்தியக்காரா, எவ்ளோ பீல் பண்ணிருக்கேன் தெரியுமா, என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு, யாரும் வேற இல்லையே, ஏதாவது உடம்பு கிடம்பு சரி இல்லையா, வண்டிய போட்டுட்டு எங்கயாவது விழுந்து எனக்கு தெரியாம இருக்கணும்னு உன்னோட பிரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் சொல்லிட்டியா, அதான் எல்லாரும் என்கிட்ட பேசாம இருந்தார்களா...எப்படி எல்லாம் பயந்திருப்பேன் தெரியுமா. நைட் எல்லாம் தூங்காம அழுதேன் டா, நாயே" என்றாள் விஜி.

"ஹலோ....நீங்க எந்த நாயா என்னை நெனச்சு இப்போ பேசறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?" என்றது எதிர்முனை குரல்.

ஆஹா, தவறு நடந்துவிட்டதே....என்று நாக்கை கடித்தவாறே,"பிரவீன் தான இது?" என்றாள் விஜி.

"நான் அந்த நாயோட பிரென்ட் முபாரக் பேசறேன், பேசலாமா?" என்றான் முபாரக்.

"ஐயோ, அண்ணா, ரியலி சாரி அண்ணா, நான் பிரவீன் னு நெனச்சு தான் பேசிட்டேன், அவன் ரெண்டு நாளா பேசல, என்னன்னு தெரில, அதான் டென்க்ஷன்ல அவன் போன் வந்ததும் அவன் தான் பேசறான் னு நெனச்சு திட்டிட்டேன். சாரி அண்ணா, எங்க அவன், என்ன செய்யறான், ஏன் எனக்கு ரெண்டு நாளா மெசேஜ் கால் பண்ணல?" என்றாள் விஜி.

"ஓஹோ, உனக்கும் அவன் ரெண்டு நாளா போன் பண்ணலயா, எங்க யாருக்குமே பண்ணல, இப்போ தான் நேர்ல வந்து பாத்து திட்டினேன், உனக்கும் கால் பண்ணலன்னு சொன்னான், டயல் லிஸ்ட் ல உன்னோட நம்பர் இல்ல, மே பி டெலிட் பண்ணி இருப்பான் னு தான் நேர உனக்கு அடிச்சு கேக்கலாம் னு கேட்டேன், நீ சொன்ன மாதிரியே நாய்க்கு ரெண்டு நாளா பயங்கர காய்ச்சல் அடிச்சுருக்கு மா, ஆனா யார்கிட்டயும் சொல்லாம இங்கயே வீட்ல தனியா படுத்துகிடந்திருக்கான். நான் ரெண்டு நாளா இங்க இல்ல, நாகப்பட்டினம் போயிட்டு இன்னிக்கு மத்தியானம் தான் வந்தேன், உடனே இவனை பாக்க வந்தேன். என் போனை கூட அட்டென்ட் பண்ணாம இருந்தான். நீ சொன்ன மாதிரி நாய் தான் மா இவன்" என்றான் முபாரக்.

"இல்ல டா, நான் எனக்கு உடம்பு சரி இல்லன்னு சொல்லி எல்லாரையும் கஷ்டப்படுத்த விரும்பல டா, அதான்" என்றான் பிரவீன்.

"அப்டியே ஓங்கி விட்டேன்னா பாரேன் கன்னம் பழுத்துடும், எழுந்திரு டாக்டர் கிட்ட போலாம்" என்றான் முபாரக்.

"இல்ல டா, நான் பாராசிட்டமால் போட்டுட்டேன், சரி ஆய்டும், நீ போ" என்றான் பிரவீன்.

"ச்சீ, எழுந்து வா, விஜி, நீ கொஞ்சம் சொல்லு, நான் இந்த நாய குளிப்பாட்ட சுடுதண்ணி போட்டுட்டு சாப்பிட கஞ்சி போட்டு எடுத்துட்டு வரேன்......டேய்...இந்தா, விஜி கிட்ட பேசு" என்றபடி போனை பிரவீனிடம் கொடுத்துவிட்டு கிச்சனுக்கு சென்றான் முபாரக்.

போனை காதில் வைத்து எதுவும் பேசாமல் இருந்தான் பிரவீன். விஜியும் எதுவும் பேசாமல் இருந்தாள். அரை நிமிடத்திற்கு பின், "விஜி கோவமா இருக்கன்னு தெரியும், மனசுக்கு வந்த வார்த்தையால திட்டிடு" என்றான் பிரவீன்.

"உன்னை திட்ட நான் யாரு பா" என்றாள் விஜி.

"ஏன் விஜி இப்டி பேசற" என்றான் பிரவீன்.

"நீ மட்டும்....யாரையும் கஷ்டப்படுத்தவேணாம் னு தான உனக்கு உடம்பு சரி இல்லைன்னு எங்ககிட்ட சொல்லல, மத்தவங்கள விடு, நான் உனக்கு யாரோவா டா? என்கிட்டே சொல்ல வேண்டிது தான?" என்றாள் விஜி.

"இல்ல விஜி, சொன்னா நீ மனசு கஷ்டப்படுவ, கடலூர் வருவ, ஆபீஸ்ல எல்லாரும் ஏன் லீவுல போறேன்னு கேப்பாங்க, அதான் சொல்லல" என்றான் பிரவீன்.

"ஏன் டா, கேட்டா என்ன, உனக்காக நான் கஷ்டப்படாம உனக்காக நான் செய்யாம யாருடா செய்யப்போறா? நான் பலமுறை சொல்லிருக்கேன், என்னை நீ வேற ஆளா பாக்காத, நான் என்னிக்குமே உன்னோட விஜி தான் னு" என்றாள் விஜி.

"இல்ல விஜி...." பிரவீன் முடிப்பதற்குள், "நீ எதுவும் சொல்லவேணாம், முபாரக் அண்ணா கூட ஹாஸ்பிடல் கு போ, நான் பிரைடே நைட் வந்து உன்னை பாக்கறேன், நானும் காயத்ரியும் வரோம், அது மட்டும் இல்ல, நீ மண்டே எங்ககூட சென்னை வர, ரம்யாவ கூட்டிட்டு வர, எர்லி மார்னிங் பஸ்ல போறோம், நீ சண்டே நைட் நாங்க கடலூர் ல இருந்து விழுப்புரம் வரும்போதே எங்ககூட எங்க வீட்டுக்கு வந்துடு" என்றாள் விஜி.

"இல்ல விஜி, நான் முபாரக் கார எடுத்துட்டு வரேன், நைட் உங்கள வீட்ல டிராப் பண்ணிட்டு நெக்ஸ்ட் டே காலைல நாம கார்ல போய் ரம்யாவை பிக்கப் பண்ணிக்கலாம், எனக்கும் நாமினேஷன் செவ்வாய் புதன் தான். நாங்க புதன் கிழமை பண்ணிக்கலாம் னு இருக்கோம். " என்றான் பிரவீன்.

"சரி அதை அப்புறம் டிசைட் பண்ணலாம், இப்போ நீ டாக்டர் கிட்ட போயிட்டு வந்து நைட் எந்த நேரமானாலும் எனக்கு கால் பண்ணற ஓகே?" என்று சொல்லி கட் செய்தாள் விஜி.

இரண்டு மூன்று மணி நேரம் கடந்திருக்கும். விஜிக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. என்ன ஆச்சோ என்ற பயம். இரண்டு மணி நேரம் கழித்து பிரவீன் போன் செய்தான்,"விஜி, எந்த ப்ராபளமும் இல்ல, நார்மல் ஜுரம் தான்" என்றான் பிரவீன்.

"அப்பாடா இப்போ தான் எனக்கு உயிரே வந்தது, சாப்டியா டா" என்றாள் விஜி.

"ம்ம்ம், கஞ்சி குடிச்சிட்டேன், நீ சாப்டியா" என்றான் பிரவீன்.

"ம்ம்ம் சாப்பிட்டேன்" என்றாள் விஜி.

"சாரி விஜி, உன்கூட ரெண்டு நாளா சரியா பேசல" என்றான் பிரவீன்.

"பரவால்ல டா, நீ ரெஸ்ட் எடு, உடம்ப பாத்துக்கோ டா, உனக்கு ஒண்ணுன்னா என்னால தாங்கிக்க முடியாது, தூங்கு, குட் நைட் டா, உன்னை இப்பவே பாக்கணும் போல இருக்கு" என்றாள் விஜி.

"எனக்கும் தான் விஜி, நீயும் தூங்கு, பிரைடே ஈவினிங் உங்க வீட்ல வந்து உன்ன பிக்கப் பண்ணிக்கட்டுமா?" என்றான் பிரவீன்.

"வேணாம், நானும் காயத்ரியும் பாண்டி ல ஆபீஸ் முடிஞ்சு நேரா கடலூர் வந்துடுவோம், நீ ரெஸ்ட் எடு, கடலூர் ல மீட் பண்றேன், இனிமே என்ன ஆனாலும் போன் எடுத்து பேசு, நீ பேசி ஜுரம் னு சொல்லி இருந்தா கூட இவ்ளோ கஷ்டபற்றுக்க மாட்டேன், எடுக்காம இருந்து எவ்ளோ ஹர்ட் பண்ணிட்ட, போ டா" என்றாள் விஜி.

"சாரி டா, மன்னிச்சுரு, மன்னிக்கலன்னா நேர்ல வரும்போது நாலு அறை கூட அறைஞ்சுக்கோ" என்றான் பிரவீன்.

"கண்டிப்பா அறயதாண்டா போறேன், பை" என்று போனை வைத்துவிட்டு கண்ணோரம் நின்றிருந்த ஒரு கண்ணீர் துளியை கையால் துடைத்தாள் விஜி.

பகுதி 52 முடிந்தது.

-------------------------தொடரும்-----------------------

எழுதியவர் : ஜெயராமன் (21-Sep-17, 9:03 pm)
பார்வை : 288

மேலே