புத்தனின் பேரமைதி

புத்தரின் பேரமைதியை
என் அறைக்குள்
அடைத்து வைக்கிறேன்
சாளரத்தையும் கதவுகளையும்
முழுவதுமாய் தாழிட்டபடி
பேரமைதி சூழ் கொண்ட
அந்த அறைக்குள் இப்போது
என்னை முழுவதுமாய்
ஆட்கொள்ள துடித்திருக்கலாம்
அந்த பேரமைதி
என் அறைக்குள்
சாளரத்தையும் கதவுகளையும்
தாழிட்டு பேரமைதியை
அடைத்து வைக்க முடிந்த என்னால்
எனக்குள் அந்த பேரமைதியை
அடைத்து வைக்க முடியவில்லை...

- பாரதி நீரு...✍

எழுதியவர் : பாரதி நீரு (23-Sep-17, 2:20 am)
பார்வை : 69

மேலே