மனிதம்

ஒருவருக்கு ஓடமே வாழ்க்கை. ஒருவருக்கு ஓட்டமே வாழ்க்கை.

ஒருவரின் தேடல் வாழ்க்கைக்கானது.
ஒருவரின் தேடல் தொலைந்து போன
வாழ்க்கைக்கானது.

இப்படித் தான்
நதிகளும்
குளங்களும்
மனிதர்களை
உயிர்ப்போடு வைத்திருக்கின்றன
முற்றுப்படாத
பயணங்களில்.

நதிகளும்
குளங்களும்
உயிர்ப்போடு
இருக்கும் வரை
முற்றுபெறும்
மனிதம்.

- சாமி எழிலன்
26 09 2017
9080228609

எழுதியவர் : சாமி எழிலன் (26-Sep-17, 9:50 am)
Tanglish : manitham
பார்வை : 111

மேலே