காதல்

சோலையில் நீல கருங்குயில் ஒன்று
கூவி கூவி இசை பாடி கொண்டிருந்தது
அதனிடம் சென்று 'காண குயிலே'
என்னவளை , இங்கு இந்த சோலையில்
இதே இடத்தில் என்னை தினம் தினம்
காண வருபவள் !! , எனோ தெரியவில்லை
குயிலே சில நாட்களாய் காணவில்லையே
நீ பார்த்தாயா . என்று கேட்டேன்
அந்த குயிலின் காதில் நான் சொன்னது
கேட்கவில்லை , பதில் ஏதும் கூறவில்லை
பேடை குயிலொடு 'டூயட்' பாடும் குயிலுக்கு
நான் சொன்னது எப்படி கேட்க்கும்! ......................

தோகை விரித்து வண்ண மயில் ஒன்று
பாங்காய் நடனம் ஆடிக் கொண்டிருக்க
அதனிடம் சென்று ' அழகு மயிலே
என்னவள், தினம் தினம் என்னைக் காண வருபவள்,
சில நாட்களாய் காணவில்லையே , நீ யாவது
பார்த்தாயா சொல்லேன் மயிலே என்று
மயிலிடம் கேட்டேன் ...........................

அந்த மயிலும் நான் கேட்டதை எனோ கேளாமல்
பதில் ஏதும் கூறவில்லை............... எப்படி அது பதில் கூறும்
ஆண் மயில் அது நடனமாடி எதிரே நிற்கும் பெண்மயிலின்
மனதில் இடம் பிடிக்க பார்த்ததுவோ..................................

துள்ளி ஓடும் புள்ளி மான் ஒன்றை கண்டேன்
என்னவளை நீ கண்டாயோ புள்ளி மானே என்று கேட்டேன்
பதில் ஏதும் கூறாது ஓடிவிட்டது பெண் மான் .
தன ஜோடியைத்தேடி..................................................

மானாய் இருந்தால் என்ன,மானாய் இருந்தால் என்ன
இல்லை குயில், கிளி என்று பறவையாய் இருந்தால் என்ன
அவை யாவுமே தத்தம் ஜோடியைத்தேடி நாடி ஓடிட ..............
என்னவளே நீ எங்கு போனாயோ நான் அறியேன்
உன்னைத்தேடி அலையும் உந்தன் காதலன் நான்
உன்னைக் காணாமல் செய்வதறியாது அலைகிறேன்
, இப்படியே போனால் தனிமை என்னை எப்படி எல்லாம்
வதைக்குமோ அறியேனே ..........அதை நினைக்கவும்
உள்ளம் இடம் கொடுக்கவில்லை........ஆதலால்
பெண்ணே நீ எங்கிருந்தாலும் இங்கு வந்துவிடு
நாம் முதல் முதல் சந்தித்தோமே அங்கு
அந்த கானகத்து பளிங்கு மேடைக்கு,
காதல் உறவாட நம் காதல் நிறைவேற ..........
நாமும் சுதந்திரமாய் , அதோ அந்த பறவைபோல,
அந்த புள்ளி மானைப்போல , மயிலைப்போல
ஆடித்திருந்து வாழ்வோமே ..................................!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Oct-17, 2:26 pm)
Tanglish : kaadhal
பார்வை : 103

மேலே