360 டிகிரி

ரதங்கள் தூங்கி கொண்டிருந்தன...
வித விதமான உடுப்புடுத்தி
அரசன் உலா வந்த வீதிகள்...
மூத்திர சந்துக்களாயின!
அந்தப்புரங்களின் குளங்களில்
எருமைகள் நீராட துவங்கிவிட்டன...
அரண்மனைகளின் நடுவே
ஓட்டடைகளில் எட்டுகால் பூசிகள்
ஊஞ்சலாடுகின்றன!
மந்திரிகள் அனைவரும்
கணக்கு பிள்ளைகளாகி...
அவரின் பிள்ளைகள்
அரசாங்க உத்தியோகத்துக்கு
வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
பதிவு செய்து கொண்டிருக்கின்றனர்...
இளவரசர்கள் டாஸ்மாக்கில்
நெபோலியானோடு போரிட்டு கொண்டிருக்க...
இளவரசர்களின் மனைவி மக்கள்
ட்ராபிக் சிக்னலில்
கையேந்தி நிற்கின்றனர்...
அன்று கீழ்சாதியென
வாயிலில் வைத்து வீசி
எறியப்பட்ட ஒருவனின் பேரன்...
இன்று அரசாளுகிறான்...
ஜன நாயகனாக...
உலகம் உருண்டை என
நிரூபணமாகிறது!

எழுதியவர் : குமரகுரு (26-Jul-11, 2:56 pm)
சேர்த்தது : குமரகுரு
பார்வை : 350

மேலே