உயிர்தந்து காப்பான் உயர் நண்பன்

நீச்சல் தெரியாத நண்பன்
கடல் நீராடச் சென்றான்
பேரலை ஒன்று வந்து அவனை
இழுத்துச் சென்றது -கரையிலிருந்து
இதைப் பார்த்த அவன் நண்பன்
ஒரு நொடிகூட யோசிக்காமல் கடலில்
குதித்தான் , நண்பனைத்தேடி பிடித்தான்
உச்சந்தலையை பிடித்து லகுவாய்
கரை சேர்த்தான் அவன் பிழைத்தான்
ஆனால் என்னென்று சொல்வது
சில நிமிடங்களில் உயிர்ப்பிச்சை தந்த
நண்பன் இதயம் ஏனோ நின்றுவிட்டது
தன உயிர் தந்து நண்பன் உயிரை மீட்டான்
நட்பின் சிகரம் நண்பன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Oct-17, 4:20 pm)
பார்வை : 384

மேலே