மனதார நிறைத்துக் கொள்வேன்

சட்டி வழித்து சோறு போட்ட
நாட்களும் உண்டு –

சட்டி வழித்த சப்தம் கேட்டு
பாதியில் போதுமென்று எழுந்துக் கொள்வேன்;

நீயும் எனக்கு –
போதுமென்று நினைத்துக் கொள்வாய்
போதாத என் பசியை –
நீ எனக்கு மட்டும் வழித்துவைத்த அக்கறையை யெண்ணி
மனதார நிறைத்துக் கொள்வேன்!!

எழுதியவர் : (5-Oct-17, 3:08 pm)
பார்வை : 9447

மேலே