ஆண் பெண் ஈர்ப்பு எனக்கு இல்லிங்க அந்த ஒரு எனக்கு ஒரு வேதனைங்க, வெறுப்புங்க படிங்க புரியும்

நான் சின்ன வயசிலே இருந்து எப்போதும் பெண் பிள்ளைங்க கூட தான் விளையாட பிடிக்கும்.
என் அம்மா " ஏண்டா இப்படி பொட்டை பிள்ளைங்க கூட விளையாடற. ஆம்பிளைங்க கூட
விளையாடுடா" ன்னு சொல்லி என்னை திட்டுவாங்க. ஆனா நான் கொஞ்சம் கூட கவலைப் படாம பெண்
பிள்ளைங்க கூட பாண்டி, ஸ்கிப்பிங், கண்ணை கட்டி கிட்டு மத்தவங்களை தேடறது, பல்லாங்குழி
ஆடுவது நொண்டி ஆடி ஒருவரை ஒருவர் பிடிப்பது போன்ற ஆட்டங்களை தான் பிடிச்சு செஞ்சு
வந்தேன்.

எனக்கு வயசு பதினாலு ஆகும் போது என் உடல் கூறு கோளாறினால் இடுப்புக்கு மேலே ஓரு
பெண்ணைப் போல ஆகிவற ஆரம்பித்தேன்.என்னை ஒரு கேவலமாக எண்ணி என் குடும்பம் என்னை
வீட்டை விட்டு போக சொல்லி விட்டாங்க.

நான் இப்போது """என்னைப் போல"" இருக்கும் ""பெண்கள் ???"" கூட தான் இருந்து வந்து கேவலப்
பட்டு வரேன்.

என் வாழ்க்கையிலே "" இந்த ஆண் பெண் ஈர்ப்பு"" ஒரு சந்தோஷத்தை தராம வெறுமனே
எனக்கு பிடிக்காத பலாத்காரம் தானேங்க குடுத்து வருது.நான் வாழ்ந்து வர எனக்கு பணம் தேவைப்
படுகிறதேங்க.இந்த நரக வாழ்க்கை என்க்கு எங்க.??

எல்லா பெரியங்களும் இந்த "ஆண் பெண் ஈர்ப்பு" ஆணடவன் கொடுத்த வர பிரசாதம்ன்னு சொல்லி
சந்தோஷப படுகிறாங்க.

ஆனா என் வாழ்க்கையிலே இந்த ""ஆண் பெண் ஈர்ப்பு"" ஒரு வெறுக்க தக்கதாகவும், வேதனை
தருவதாகவும் இருக்கு தேங்க.ஆனா இந்த " பெண் பெண் ஈர்ப்பு "" ஒரு வர பிரசாதமாகவும்,எனக்கு ஒரு
கம்பனியும் தந்து வருதுங்க.

இந்த துயரம் அந்த ஆண்டவன் கொடுத்த ஒரு பரிசாங்க, இல்லை போன ஜென்மத்தில் செஞ்ச
பாவமாக.

யாராச்சும் சொல்ல முடியுமாக????

எழுதியவர் : ஜெ சங்கரன். (7-Oct-17, 12:23 pm)
பார்வை : 218

மேலே