கிளைக்கேற்ற நிழல்
போகும் பாதையில்
தனிமையில் வாழ்ந்துகொண்டிருந்த
ஒரு வார்த்தையை எடுத்து
பட்ட மரத்தின் நுனிக்கிளையில்
படரவிட்டு
சில நாட்களில்
திரும்பிப்பார்க்க
வார்த்தை வாக்கியமாய் மாறி
மரத்தடியில் கவிதையாய்
வாழ்ந்துகொண்டிருக்கிறது
கிளைக்கேற்ற நிழல்
J.K.பாலாஜி
மதுரை.