மரணமே உனக்கு ஒரு மரணம் வாராதா

கண்ணீர்கள்..... என்னோடும் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

மாரடைப்பே....உனக்கு ஒரு மாரடைப்பு வராதா.....

மரணமே உனக்கு ஒரு மரணம் வாராதா...

ஏய்....நாசமா போன கண்ணீரே உனக்கு ஒரு கண்ணீர் வாராதா....

என் நண்பனை கொண்டு போயிட்டியே.....

உன்னை கொண்டு போக யாருமே இல்லையா....

நண்பா..... நண்பா.... நண்பா.......

வாறேம்டேய்....நாங்களும் உன்னைப் பார்க்க....

உன் வழிதனை நிறைவேற்றுவேன் நானும் முடிந்தவரை....எனக்குத் தெரியும் உன் எண்ணம்....

தூங்குடேய் மக்கா நிம்மதியாக தூங்கு....நாங்கள் உன் பின்னால்....!

எழுதியவர் : (24-Oct-17, 2:28 pm)
பார்வை : 25106

மேலே