பரிசமிட அழைப்பாயோ

உன்
மந்திரப்புன்னகையில்
மயங்கிப்போன இக்குளகன்
குழம்பித் தவிக்கிறான்

உன்
கொழுநன்னாகிட போதும் - உன்
குடங்கையில் என் விரல்கள்
கோலமிட வேண்டும்.

பஞ்சிதங்களெல்லாம் விரதமிருக்கிறது
பதுமை உன் பார்வை பட்டிட

உன்
பதியாகும் இவன்
ஆசையை ஏற்று
பரிசமிட அழைப்பாயோ - இல்லை
பார்வையாலே என்னைக்கட்டி
பைத்தியமாக்கி ரசிப்பாயோ!

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (5-Nov-17, 6:00 pm)
பார்வை : 73

மேலே