சேர்ந்திடுமனமே

முன்பனி நேரம்
இலையுதிர் காலம்
இரவுமழை நேரம்
குடைகளைக் காணோம்
விடிந்துவரும் நேரம்
சுவடுகள் இனிமாறும்

நேற்றுவரை
காத்துக்கிடந்தேன்
உன்னை பார்க்கும்வரையில்
தேடிக்கிடந்தேன்
இன்று காணவில்லை
தொலைந்துவிட்டேன்

தனிமையில் நானும்
தவிக்கிறேன் நாளும்
சேர்ந்துவிடு நீயும்
சோகம் இனி தீரும்

வேர்கள் இல்லா
மரங்களோ நானோ
நிற்கிறேன் படர்கிறேன்
உன் விழுதுகளால் தானோ

வாழ்க்கையென்றால்
பல ஏமாற்றம் தானோ
என் வாழ்வின் மூலாதாரம்
நீ சேர்வதால் தானோ

கட்டிவைத்தாய்
வார்த்தைக் கயிற்றால்
என்னை சுட்டடெரித்தாய்
உன் பார்வை நெருப்பால்
பின் கொன்றுகுவித்தாய்
உன் மௌனமுள்ளால்

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (16-Nov-17, 11:53 am)
பார்வை : 761

மேலே