பசியும் பட்டினியும்

********************
காலச் சக்கரம்
சுழன்றும் பயனில்லை
கால் வயிற்றை
நிரப்பிட வழியின்றி
இன்றும் தவிக்குது ஓரினம்...

காலையில் கண்டேன்
ஆங்கில நாளிதழில்
அக்கால புகைப்படம்
ஒன்றை...

ஒடுங்கி அமர்ந்துள்ளது
ஓரமாக கூட்டமொன்று
உழைக்கும் வர்க்கமது
ஒருபிடிச் சோற்றுக்கு
ஏழையெனும் இனமது
ஏக்கமுடன் காத்திருக்கு..

நிலையும் மாறவில்லை
பசியும் ஆறவில்லை
பட்டினியும் தீரவில்லை
தீர்வுக்கும் வழியில்லை
வழியும் தெரியவில்லை..

நீடிக்கும் இந்நிலையால்
துடிக்குது என்னிதயமும்
வலிக்கிறது நெஞ்சமும்..

வழிகின்ற விழிகளால்
விழித்திரை மறைக்கிறது
வரிகளை தொடர்ந்திட
மனமும் மறுக்கிறது...


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (17-Nov-17, 3:51 pm)
பார்வை : 341

மேலே