நெஞ்சின் துளைகள்

நீ பேசுவது வார்த்தைகளா? அக்னி தூறல்களா?
இதயத்தை கிழித்து விடுகின்றதே நொடிதனில்?
உதிர சொட்டுகளும் உறைந்து விடுகின்றதே!
இது நாளும் ஊசலாடும் உயிரை வியக்கின்றேன்!

வார்த்தை ஒவ்வொன்றும் துளையிட்ட இதயத்தை
இரத்தம் உறைந்ததினால் துளைகள் அடைப்பட்டதோ ?
நிறுத்திக்கொள், உன் ஆணவ சொற்கணையை,
தாங்காது என் இதயம், வெடித்துவிடும் அது நிச்சயம்.

ஒற்றை சொல் பொறுக்கா உன் சிந்தை நினைக்கின்றதா
சொற்கணையை ஏற்கும் சிந்தை மங்கைக்கில்லையென்று ?
ஆண்டாண்டு காலமாய் பெண் விடுதலை பேசினாலும்
இங்கு ஆணுக்கொரு ஒரு நீதி பெண்ணுக்கொரு நீதி!

எழுதியவர் : ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் (18-Nov-17, 3:29 pm)
பார்வை : 109

மேலே