நிலாச்சோறு

பால்ய தேடலில்
பள்ளியாய்
பருவத் துடிப்பினில்
கன்னியாய்
வாழ்க்கை பகிர்வினில்
துணையாய்
வருங்கால நோக்கலில்
செல்வமாய்
கர்வம் மெல்ல
துளிர்க்கையில்
கௌரவமாய்
உணர்வு பிடிப்பினில்
உறவுகளாய்
நெஞ்ச நிறைப்பினில்
நினைவுகளாய்
களித்த பொழுதினில்
கவிதைகளாய்
நரை சற்று நிமிர்கையில்
பக்தியாய்
நான்கு கால் பயணத்தில்
மோட்சமாய்
அண்டவெளி பந்தியில்
நிதம்
அகன்று கொண்டேதான்
இருக்கிறது
அன்று
ஆகாயம் பார்க்கச் சொல்லி
அன்னை தந்த
நிலாச்சோறு!

எழுதியவர் : தானியேல் நவீன்ராசு (18-Nov-17, 8:15 pm)
பார்வை : 159

மேலே