எனக்கெனப் பிறந்தவள்
பட்டாடை கட்டிவந்து
என்னைப் பாலாக்க வந்தவள்!
நான்கற்ற மொழிகளில்
காதலைப் புதுமொழியாகத் தந்தவள் !
நாணத்தை உனக்குள்
சிறந்த பொக்கிசமாகக் கொண்டவள் !
இதழ்சிரிப்பில் என்இதயத்தை
இரு நொடிகளில் களவாடியவள் !
உதிராத மல்லியின்வாசத்தால்
என்னை அவள்பக்கம் இழுத்தவள் !
ஊடல்கொள்ளும் முன்னும்
பின்னும் உரையாடக் கேட்டவள் !
வண்ணமாக மின்னும்
நவரத்தினத்தின் ஒளிகளில் உற்றவள் !
ஊஞ்சலில் ஆடும்
மயிலென்று இயற்பெயர் பெற்றவள் !