நாநிலம் சிறக்குமா

மதிப்பு குறையுமோன்னு
மகராசி முயற்சிக்க,
மானம் போனதுன்னு
மனசொடிஞ்ச மாணவிகள்
மண்ணுடன் இசைந்து வாழ
மரணத்தை நேசித்தாரோ!

தணியாத சினமா?—இல்லை
தனிப்பட்ட காரணமா?,
கல்விக்கு அழகூட்ட
கடமையின் ஒப்பனையா?
பள்ளி பிள்ளைகளின்
பொறுப்பற்ற செயலா?

பள்ளியில் யாருக்கு யார்
பாடம் புகட்டுவது?
பள்ளி ஆசிரியரின்
பாடத் திட்டமா?—இல்லை
பள்ளி தோழிகளின்
புதிய வழி பாடமா?

முரண்பட்ட எண்ணத்தால்
முன்கோபம் தலைதூக்க,
காத்திருந்த காலனோ
கள்வனாய் உயிரை பறிக்க
இதுதான் விதியென்றால்
இறைவனும் என் செய்வான்?

தடம் பதிக்கும்
தற்கொலை கலாச்சாரம்
தமிழகப் பண்பாட்டை
தலைகுனிய வைத்துவிடும்,
நம்பிக்கையும், நேர்மையும்
நலிவுற்றால், நாநிலம் சிறக்குமா?

எழுதியவர் : கோ. கணபதி (7-Dec-17, 8:33 am)
பார்வை : 270

மேலே