நண்பன்

நெஞ்சில் இருப்பான் நாம் நிலை குலைந்து
போகையிலும் ஒன்றாய்க் கிடப்பான்
நம் மகிழ்விலும் மனம் நிறைவான்
புகழ் வந்தாலும் அவன் உயரங்கள்
பல தொட்டாலும் தோழமை தனை மறவான்
சந்தோசம் வருங்கால் உன்னை நெருங்கும்
துன்பம் வருங்கால் உன்னை விட்டு
ஒதுங்கும் உனது உறவுகள் முன்னே
கடவுள் வடிவாய் வந்து உயிர் காப்பான் தோழன்
நண்பன் இல்லா வாழ்க்கை காற்று இல்லா பூமி
நட்புக்கு ஈடாக நானிலத்தில் ஏதும் உண்டோ

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (14-Dec-17, 4:08 pm)
Tanglish : nanban
பார்வை : 800

மேலே