எட்டுவச்சேன் தைரியமா

ஒத்தையடி பாதையிலே
ஒத்த செருப்பு கையிலே
ஒண்டிக்கட்டயாய் நடக்கயிலே

ஓலமிட்டு நாயி ஒன்னு
ஒத்த கைய கவ்விகிட்டு
கையா இல்ல செருப்பா-னு கேக்க
செருப்ப விட்டு செலதூரம் நடந்தேன்

சாயங்காலம் வந்துருச்சு
அம்மாவாச இருட்டிருச்சு
தண்ணிதர ஆளுமில்ல
தடுக்கிவிழுந்தா தூக்கிவிட யாருமில்ல

போங்கடா..
எதிர்த்து நிக்க எவனுமில்ல
எட்டுவச்சேன் தைரியமா...!

எழுதியவர் : கோபாலகிருஷ்ணன் ராமன் (19-Dec-17, 11:02 pm)
சேர்த்தது : Gopalakrishnan Raman
பார்வை : 104

மேலே