முதிர்ச்சி
விதையாய் விழுந்த
ஆசை,
முளைத்து எழ
பொறுமை,
செடியாய் வளர்த்த
முயற்சி,
கனியாய் கனிந்தால்
சுகம்,
காயாய் உதிர்ந்தால்
துக்கம்,
விழுதாய் விளைந்தால்
தர்மத்தின் சக்கரம்,
வீணாய் போனால்
தர்மத்தின் எழுச்சி,
இரண்டையும் ஏற்றால்,
முதிர்ச்சி,
இல்லையானால்
அயற்சி.