நம்பிக்கை

பரணி பாடும் நதிகள்!

கீழே விழுந்து
சிதறும்போது
கைதூக்கி விடும்
வானம்!

துணிந்த
இதயங்களுக்கு
பள்ளத்தாக்குகள்
பல்லாங் குழிகளே!

ஓடும் நதிகள்
பரணி
பாடி
வீரத்திலகமிடும்!

மலைகள்
மாலை
சூடும்!

புது
புறநானூறு
படைத்திடுவர்
புலவர்கள்!

இதுபோன்ற
இளைஞர்கள்
இருக்கும்வரை
இந்திய தேசத்தை
எவராலும்
வீழ்த்த இயலாது.


- சாமி எழிலன்

எழுதியவர் : சாமி எழிலன் (30-Dec-17, 11:39 am)
சேர்த்தது : Saami Ezhilan
Tanglish : nambikkai
பார்வை : 969

மேலே