விரல் மொழியர்

விரல் மொழியர்
சர்வ தேச நாயகனே!
பிரைய்லி
வரிகளை பொய்யாக்கியவரே!
கணிதம்,இசை,மொழி-இவைகளை
குறீயீடுகளாய் மாற்றியவரே.
எமுத்தை ஆறு புள்ளியாய் படைத்தவரே.
விரல் நுனிகளை விழியாக்கியவரே
முள்ளை முள்ளால் எடுத்தவரே
தன் கண்ணில் பதிந்த ஆணியை
தன் எழுத்து முறையில் பதித்த ஆணியால்
சமன் செய்தவரே!
கணினி தொழில் நுட்பம் வளந்த பிறகும்
பேனாவின் தேவை இன்னும் தீரவில்லை
ஆனால்,
விரல் மொழியர்
அப் பேனாவின் மையை மறைய செய்தார்.
புறக் கண்ணை காட்டிலும்.
அகக் கண்மூலம் நாம் இறைவனை-காண
இயலும்.
லூயில் பிரெய்லி-க்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

எழுதியவர் : சே.சுரேஷ்தழிழ் (5-Jan-18, 10:06 pm)
பார்வை : 101

மேலே