பொங்கல் அன்று பொங்கட்டும்

பொங்கட்டும் தைப் பொங்கல் அன்று பொங்கட்டும்
நேர்மறை சிந்தனைகள் எம் மனதில் தோன்றட்டும்
தமிழ் இலக்கியம் ஓங்கி கிளை விட்டு வளரட்டும்
வருங்கால தலைமுறைகள் தமிழை வளர்க்கட்டும்
கதிரவன் ஒளி பரவி உலகில் வீசட்டும்
மக்கள் மனதில் நல்ல செயல்கள் தோன்றட்டும்
மூட நம்பிக்கைகள் எம்மை விட்டு அகலட்டும்
மனித உரிமை மீறல்கள் உலகில் இருந்து மறையட்டும்
சூது, வாது, ஊழல், சர்வாதிகாரம. வன்முறை அழியட்டும்
தமிழ் இனத்துக்கு எனத் தனி நாடு பிறக்கட்டும்
எம் தமிழ் இனம் ஒற்றுமையாய் வாழட்டும்
தமிழ் கலாச்காரம் ஓங்கி செழிக்கட்டும்
பண்டைய தமிழ் மொழி உலகெலாம் பரவட்டும்
பாரதி கண்ட கனவு நினைவாகட்டும்
சாந்தி. அன்பு உலகில் நிலவட்டும்
பொங்கட்டும் பொங்கல் அன்று பொங்கட்டும்
இவையெல்லாம் பொங்கி வழியட்டும்
***

எழுதியவர் : பொன் குலேந்திரன் – கனடா (15-Jan-18, 6:37 am)
பார்வை : 73

மேலே