இராப்பத்து பதிகம் - பதிகம் 9
பதிகம் 9
முடிகோதி மடிபுரள்க
சுருண்ட கூந்தலில் சுருண்டவனே
சுருண்ட மனத்தை நீவிவிடு
உன் சொற்கள் மயில்பீலி ஆகட்டும்.
அவனை விட்டல்ல
அவனைப் புறந்தள்ளி அல்ல
அவனை விடவும் மேலான
அன்பு , அரவணைப்பு
ஆறுதல் , தேறுதல்
தேடுதல் , கூடுதல்
நிறைய நிறைய எதிர்பார்க்கிறேன்.
வாழ்வைப் பணையம் வைத்து வருகிறேன்
அற்ப சுகம் என்று சொல்லேன்
ஆனந்த லாகிரி
பேரானந்தப் பெருஞ்சுகம்.
உன்னில் உள்ளதென்று நம்பி
ஒப்படைக்கிறேன்.
கூடுதல் தவிர
எந்த நிபந்தனையும் என்னிடமில்லை.