குடியரசு தின கவிதை

ஆங்கிலேயர்களிடமிருந்து
அகிம்சை என்னும்
அறவழியில் வெற்றிவாகை
குடியரசு தினம்
உப்புசத்தியாகிரகங்களால்
தன்
உடல்களை வருத்தி
தாயகத்திற்க்கு
பெருமைத்தேடித்தந்த தினம்
தன் குருதிகளையும்
தன் தேகங்களையும்

தன் தாய்நாட்டிற்காக
அர்ப்பணம் செய்தவர்களை
நினைவுக்கூறும் தினம்
தன்
வம்சா வழியினர்கள்
வசந்தமாய் வாழ
தன்
வாழ்நாட்களை
வலியுடன் கழித்தவர்களை
வருத்தமுடன்
நினைக்கும் தினம்
சுதந்திரக்காற்றை
நம் தேசத்தில் நிலவவிட
தம் சுகங்களையெல்லாம்
தூக்கியெறிந்த
தியாகிகளின்
தியாக தினம்
நம் தாய்நாட்டினை
அன்னியர்களின்
பிடியிலிருந்து காப்பாற்ற
பாடுபட்டவர்களை
இன்றுமட்டும்
நினைப்பதில்
நியாயமில்லை
எந்த நோக்கத்தில் நமக்காக
சுதந்திரத்தை வாங்கித்தந்தார்களோ
அதைகண்ணியத்துடன்
காத்துக்கொள்ளவேண்டியது
நம்கடமை
சுதந்திரக்காற்றை சுகமாய்
அனுபவிக்கும்
நம் சுதந்திரகொடிபோல்
நாமும் நமக்காக பாடுபட்டு
வாங்கித்தந்ததை பத்திரப்படுத்தி
வாழ்வோமாக
நாட்டை நினைக்கும்போது
நாட்டுக்காக
போராடியவர்களையும்
நினைவுகூறுவோமாக.
அத்தனைபேரையும்
புகழ்ந்து போற்றுவோம்
எந்தாய்திருநாட்டில்
வாழும் கோடானகோடி
மக்களுக்கும்
உலகம் முழுவதும் இருக்கும் என்
இந்தியமக்களுக்கும்
என்அன்பான
குடியரசு தின வாழ்த்துகள்.

எழுதியவர் : (23-Jan-18, 4:30 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 38360

மேலே